13 22
இலங்கைசெய்திகள்

ரணில் மீது ஐரோப்பிய தேர்தல் குழு குற்றச்சாட்டு

Share

ரணில் மீது ஐரோப்பிய தேர்தல் குழு குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பிரசாரத்தின் போது, சட்டத்தை மீறியதாக, ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

2024 ஜனாதிபதித் தேர்தல் குறித்த, தமது பூர்வாங்க அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணிக்குழு வெளியிட்டுள்ளது.

பொதுத்துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, சமூக நலத்திட்டங்கள், வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் மற்றும் சிறு வணிகங்களுக்கான பண உதவித் திட்டங்கள் என்பன, தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டன.

அத்துடன், இந்த விடயங்களுக்கு அரச ஊடகங்களில் சாதகமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பிரசாரப் பேரணிகளில் அரச மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பங்கேற்றனர் என்றும் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஸ்பெயினின், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியின் பிரதான கண்காணிப்பாளருமான நாச்சோ சான்செஸ் அமோர் (Nacho Sánchez Amor), இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் ஆணையகம், தேர்தலின் அனைத்து முக்கிய கட்டங்களிலும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து சுதந்திரமாகவும் உறுதியுடனும் செயன்முறையை நடத்தியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் குழு, எதிர்கால தேர்தல்களை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் உட்பட இறுதி அறிக்கையை வரும் மாதங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...