13 22
இலங்கைசெய்திகள்

ரணில் மீது ஐரோப்பிய தேர்தல் குழு குற்றச்சாட்டு

Share

ரணில் மீது ஐரோப்பிய தேர்தல் குழு குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பிரசாரத்தின் போது, சட்டத்தை மீறியதாக, ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

2024 ஜனாதிபதித் தேர்தல் குறித்த, தமது பூர்வாங்க அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணிக்குழு வெளியிட்டுள்ளது.

பொதுத்துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, சமூக நலத்திட்டங்கள், வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் மற்றும் சிறு வணிகங்களுக்கான பண உதவித் திட்டங்கள் என்பன, தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டன.

அத்துடன், இந்த விடயங்களுக்கு அரச ஊடகங்களில் சாதகமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பிரசாரப் பேரணிகளில் அரச மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பங்கேற்றனர் என்றும் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஸ்பெயினின், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியின் பிரதான கண்காணிப்பாளருமான நாச்சோ சான்செஸ் அமோர் (Nacho Sánchez Amor), இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் ஆணையகம், தேர்தலின் அனைத்து முக்கிய கட்டங்களிலும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து சுதந்திரமாகவும் உறுதியுடனும் செயன்முறையை நடத்தியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் குழு, எதிர்கால தேர்தல்களை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் உட்பட இறுதி அறிக்கையை வரும் மாதங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...