25 6833d5926b240
இலங்கைசெய்திகள்

மியான்மரில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற 400 ஏதிலிகள் உயிரிழந்திருக்கலாம்: வெளியிடப்பட்டுள்ள அச்சம்

Share

மியான்மரில் இருந்து கடல் மார்க்கமாக, தப்பிச்செல்ல முயன்ற 427 ஏதிலிகள், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் இதனை தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு முதல், மியான்மரில், முஸ்லிம் சிறுபான்மையினர், அந்த நாட்டு படையினரால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் அவர்களில் சிலர் கடல் மார்க்கமாக வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர்.

இந்தநிலையில், அண்மையில், நாட்டில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற ஏதிலிகளின் இரண்டு கப்பல்கள், கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், கடந்த 9ம் திகதி 267 பேருடன் சென்ற கப்பலில் இருந்து, 66 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, 10ம் திகதியன்று, 247 பேருடன் சென்ற கப்பலில், 21 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர்.

இந்தநிலையில், மீதமுள்ள 427 பேரின் நிலை பற்றி இதுவரை எந்த விபரமும் கிடைக்கவில்லை.

சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை, முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...