25 6833d5926b240
இலங்கைசெய்திகள்

மியான்மரில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற 400 ஏதிலிகள் உயிரிழந்திருக்கலாம்: வெளியிடப்பட்டுள்ள அச்சம்

Share

மியான்மரில் இருந்து கடல் மார்க்கமாக, தப்பிச்செல்ல முயன்ற 427 ஏதிலிகள், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் இதனை தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு முதல், மியான்மரில், முஸ்லிம் சிறுபான்மையினர், அந்த நாட்டு படையினரால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் அவர்களில் சிலர் கடல் மார்க்கமாக வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர்.

இந்தநிலையில், அண்மையில், நாட்டில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற ஏதிலிகளின் இரண்டு கப்பல்கள், கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், கடந்த 9ம் திகதி 267 பேருடன் சென்ற கப்பலில் இருந்து, 66 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, 10ம் திகதியன்று, 247 பேருடன் சென்ற கப்பலில், 21 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர்.

இந்தநிலையில், மீதமுள்ள 427 பேரின் நிலை பற்றி இதுவரை எந்த விபரமும் கிடைக்கவில்லை.

சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை, முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 6839e6fb171fc
இலங்கைசெய்திகள்

வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட அரச வங்கி காசளர் கைது

இலங்கையின் பிரதான அரச வங்கிக் கிளையொன்றின் பிரதம காசளர் ஒருவர், பாரியளவு வங்கிப் பணத்தை வட்டிக்கு...

25 6839ea056de1c
இலங்கைசெய்திகள்

யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!

யாழில்(Jaffna) பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சங்கானை...

harshana nanayakkara
இலங்கைசெய்திகள்

உருவாகவுள்ள புதிய பயங்கரவாத தடை சட்டம்..! அரசாங்கத்தின் திட்டம்

உலகளாவிய ரீதியில் உருவாகும் பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதற்கு புதிய பயங்கரவாத தடை சட்டம் அவசியம் என...

25 683949cc67811
இலங்கைசெய்திகள்

அதிரடி காட்டும் அநுர அரசு! தொடரும் கைதுப் பட்டியல் – சிக்குவார்களாக முக்கிய புள்ளிகள்

சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே கள்வர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது, அந்த வகையில் கள்வர்கள்...