24 665677e14a364
இலங்கைசெய்திகள்

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஜீவன் எச்சரிக்கை

Share

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஜீவன் எச்சரிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க முடியாத பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத் தொகையாக 1700 ரூபாவினை வழங்க முடியாத நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தங்களை அரசாங்கம் ரத்து செய்யும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த நிறுவனங்களை விடவும் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யக்கூடிய வேறு தரப்பினர் பெருந்தோட்டத் துறையில் முதலீடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட 2385/14 என்ற இலக்கமுடைய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

சம்பளப் பிரச்சினை குறித்து பெருந்தோட்ட நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பாத காரணத்தினால் இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வழங்காதிருப்பதற்கு பெருந்தோட்டத்துறைசார் நிறுனங்களுக்கு நியாயமான காரணங்கள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுதோட்ட உரிமையாளர்கள் தற்பொழுது தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...