24 665677e14a364
இலங்கைசெய்திகள்

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஜீவன் எச்சரிக்கை

Share

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஜீவன் எச்சரிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க முடியாத பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத் தொகையாக 1700 ரூபாவினை வழங்க முடியாத நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தங்களை அரசாங்கம் ரத்து செய்யும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த நிறுவனங்களை விடவும் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யக்கூடிய வேறு தரப்பினர் பெருந்தோட்டத் துறையில் முதலீடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட 2385/14 என்ற இலக்கமுடைய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

சம்பளப் பிரச்சினை குறித்து பெருந்தோட்ட நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பாத காரணத்தினால் இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வழங்காதிருப்பதற்கு பெருந்தோட்டத்துறைசார் நிறுனங்களுக்கு நியாயமான காரணங்கள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுதோட்ட உரிமையாளர்கள் தற்பொழுது தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...