இலங்கைசெய்திகள்

300 ரூபாவாக குறைந்துள்ள டொலர் பெறுமதி: வலுவடையும் இலங்கை ரூபா

24 66063f185932e
Share

300 ரூபாவாக குறைந்துள்ள டொலர் பெறுமதி: வலுவடையும் இலங்கை ரூபா

டொலரின் பெறுமதி சுமார் 300 ரூபாவாக குறைந்துள்ள நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைவது எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சந்தையில் 70 – 75 ரூபா வரை விலை உயர வேண்டிய ஒரு முட்டையின் விலையானது அரசாங்கம் முட்டைகளை இறக்குமதி செய்வதால் 40 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

சந்தையில் தலையிட்டு விலையை கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேவேளை சந்தையில் முட்டையின் விலை 40 ரூபாவிற்கு குறைவாக இருந்தால் இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் உள்ளூர் மற்றும் இறக்குமதி பொருட்களான மரக்கறிகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் வெங்காய ஏற்றுமதியை நிறுத்தியதையடுத்து, சீனா போன்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், நடுத்தர அளவிலான இளஞ்சிவப்பு வெங்காயத்தின் இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...