7 48
இலங்கைசெய்திகள்

நாட்டில் கணிசமாக குறைந்துள்ள பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

Share

நாட்டில் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.

1,400 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நெத்தலி விலை 800 ரூபாயாக குறைந்துள்ள நிலையில், 1,400 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கொண்டைக்கடலை 600 ரூபாவாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு அதிகரித்த வெங்காயத்தின் விலை, இந்த ஆண்டு 800 ரூபாவாக உயர்ந்தது. எனினும் தற்போது ஒரு கிலோ வெங்காயத்தை 200 முதல் 220 ரூபாய் வரை கொள்வனவு செய்ய முடியும்.

கடந்த ஆண்டு ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 320 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 165 ரூபாயாக உள்ளது.

கடந்த காலத்தில் 600 ரூபாயாக உயர்ந்திருந்த டின் மீன் விலை இன்று 380 ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கிடையில், முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு பெப்ரவரியில், ஒரு முட்டையின் விலை 60 முதல் 65 ரூபாய் வரை இருந்தது. இன்று ஒரு முட்டையின் விலை 27 முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது.

முன்னதாக கோழி விலை இறைச்சி விலை கிலோ ஒன்றுக்கு 1,600 ரூபாயாக இருந்தது. இன்று, ஒரு கிலோ கோழி இறைச்சி 900 முதல் 1,000 ரூபாயில் வரை கொள்வனவு செய்ய முடியும் என தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...