EPF- ETF இலிருந்து பெறப்படும் கடன்கள் தொடர்பில் உத்தரவு
இலங்கைசெய்திகள்

EPF- ETF இலிருந்து பெறப்படும் கடன்கள் தொடர்பில் உத்தரவு

Share

EPF- ETF இலிருந்து பெறப்படும் கடன்கள் தொடர்பில் உத்தரவு

உள்நாட்டு கடன் மேம்படுத்தல் செயற்பாட்டின் போது ஊழியர்களின் எதிர்கால வைப்பு நிதி ( EPF) மற்றும் ஊழியர்களின் அறக்கட்டளை நிதியில் (ETF ) பெற்ற கடனைத் தள்ளுபடி செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு நேற்று(27.07.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அந்த மனுவை ஆகஸ்ட் 27 ஆம் திகதி பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மனு தொடர்பான வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுக் கடனை மேம்படுத்தும் நடவடிக்கையின் போது EPF மற்றும் ETF இலிருந்து பெற்ற கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கம், அதன் தலைவர் வசந்த சமரசிங்க மற்றும் 6 பேர் சார்பில் சட்டத்தரணி சுனில் வதகல உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...