19 6
இலங்கைசெய்திகள்

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு: இலங்கையில் இருந்து பறந்த 100 பேர்

Share

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு: இலங்கையில் இருந்து பறந்த 100 பேர்

தென் கொரியாவில் (South Korea) உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்ற மேலும் 100 இலங்கையர்கள் நேற்று (06) தென் கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.

இந்தக் குழுவில் 08 யுவதிகளும் உள்ளடங்குவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்குள் 3,694 பேர் தென் கொரியாவில் வேலைக்குச் சென்றுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தென் கொரிய மனித வள அபிவிருத்தி சேவை நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வுக்கு அமைய, இலங்கையர்களுக்கு இந்த தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுகின்றன.

புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், 2004 ஆம் ஆண்டு முதல் இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாகவும், இம்முறை 873 ஆவது குழு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...