tamilni 593 scaled
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனத்தின் உபகரணங்களை திருடும் ஊழியர்கள்

Share

அரச நிறுவனத்தின் உபகரணங்களை திருடும் ஊழியர்கள்

மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபை என்பவற்றின் உபகரணங்கள் அண்மைக்காலமாக திருட்டுப் போவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் முன்னணி அரச நிறுவனங்களில் ஒன்றான மில்கோ நிறுவனம் ஹைலன்ட் பால் மா, யோகட், பதப்படுத்தப்பட்ட பால், போத்தலில் அடைக்கப்பட்ட பால் என பல்வேறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நிறுவனமாகும்.

அதேபோன்று தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபையும் தயிர் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திகளை சந்தைப்படுத்துகிறது.

இவ்வாறான நிலையில் குறித்த நிறுவனங்களை இந்தியாவின் அமுல் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குறித்த நிறுவனங்களின் உபகரணங்களை அவற்றின் ஊழியர்களே திருடிச் செல்வதாக தெரியவந்துள்ளது. மின்விளக்குகள் கூட அவ்வாறு ஊழியர்களினால் திருடிச் செல்லப்படுவதாக கூறப்படுகின்றது

குறித்த நிறுவனங்களின் உயரதிகாரிகள் எவ்வளவோ முயற்சி செய்தும் திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...