tamilni 593 scaled
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனத்தின் உபகரணங்களை திருடும் ஊழியர்கள்

Share

அரச நிறுவனத்தின் உபகரணங்களை திருடும் ஊழியர்கள்

மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபை என்பவற்றின் உபகரணங்கள் அண்மைக்காலமாக திருட்டுப் போவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் முன்னணி அரச நிறுவனங்களில் ஒன்றான மில்கோ நிறுவனம் ஹைலன்ட் பால் மா, யோகட், பதப்படுத்தப்பட்ட பால், போத்தலில் அடைக்கப்பட்ட பால் என பல்வேறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நிறுவனமாகும்.

அதேபோன்று தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபையும் தயிர் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திகளை சந்தைப்படுத்துகிறது.

இவ்வாறான நிலையில் குறித்த நிறுவனங்களை இந்தியாவின் அமுல் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குறித்த நிறுவனங்களின் உபகரணங்களை அவற்றின் ஊழியர்களே திருடிச் செல்வதாக தெரியவந்துள்ளது. மின்விளக்குகள் கூட அவ்வாறு ஊழியர்களினால் திருடிச் செல்லப்படுவதாக கூறப்படுகின்றது

குறித்த நிறுவனங்களின் உயரதிகாரிகள் எவ்வளவோ முயற்சி செய்தும் திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...