rtjy 58 scaled
இலங்கைசெய்திகள்

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் வெளியான ஆய்வு அறிக்கை!

Share

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் வெளியான ஆய்வு அறிக்கை!

ஊழியர் சேமலாப நிதியில் அரசாங்கம் தலையிடுவதை 77 சதவீத மக்கள் விரும்பவில்லை என்று கூறிய வெரைட்( Verite) ஆய்வு அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

உள்நாட்டுக் கடன் மேம்படுத்தலின் கீழ் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் தலையீடு செய்ய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை இந்த நாட்டில் உள்ள 77 வீத முதியோர் ஏற்கவில்லை என்று வெரைட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையை நிராகரிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியம், தலையிடுவதற்கு இலங்கையின் சனத்தொகையில் 28 சதவீத மக்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்ததாக சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒரு ஆய்வு அறிக்கையை முன்வைத்துள்ளது.

எனினும் அந்த நிறுவனம் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட மாதிரி அளவு 1008 தனிநபர்களாவர். அல்லது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.0045 சதவீதத்தினர் மட்டுமே என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சேமசிங்கவின் கூற்றுப்படி, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இலங்கை வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் 57.2 மில்லியன் வங்கிக் கணக்குகளையும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதிகளையும் பாதுகாக்கின்றது.

கடன் மறுசீரமைப்பு ஏற்படாதிருந்தால் இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் செயல்முறையானது உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவதன் காரணமாக ஓரளவு வெற்றியடைந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் இலங்கையின் ஒத்துழைப்பை பாராட்டுவதாக சேமசிங்க கூறியுள்ளார்.

அத்துடன் மேலும் கடனைத் திருப்பிச்செலுத்தும் காலத்தை நீடித்து வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு இலங்கை முதன்மையாக எதிர்பார்க்கின்றது.

இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் நீடிக்கப்பட்ட கடனின் இரண்டாம் தவணை தாமதமின்றி நிறைவேற்றுக் குழுவால் அங்கீகரிக்கப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...