12 மணித்தியாலங்களாக அதிகரிக்கப் போகும் வேலைநேரம்..!
இலங்கைசெய்திகள்

12 மணித்தியாலங்களாக அதிகரிக்கப் போகும் வேலைநேரம்..!

Share

12 மணித்தியாலங்களாக அதிகரிக்கப் போகும் வேலைநேரம்..!

இலங்கையில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், தொழிலாளர் சட்டத்தை திருத்துவது தொடர்பில் அரசாங்கத்தால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சாதாரண தொழிலாளர்களுக்கு அநீதி ஏற்படும் வகையிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தொழில் புரியும் இடங்களில் சேவையாற்றுவதற்காக தொழிலாளர்களுக்கு இருக்கும் உரிமை, தேவையான நேரத்தில் அவர்களை வெளியேற்ற இருக்கும் உரிமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சட்டத்தை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஏற்றவாறு சட்டங்களை உருவாக்கும் நிலைமையே இதனூடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்புரியும் தொழிற்சாலைகளின் பிரதானிகளினால், தொழிலாளர்களுடன் தனியான ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள கூடியவாறான ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தங்களில் தொழிலாளர்கள் கட்டாயம் கையொப்பமிடவேண்டி ஏற்படும்.

அதில் கையொப்பமிட்டதன் பின்னர் சாதாரண தொழிலாளர் சட்டம் நடைமுறையில் இருக்காது. எனவே, அதனூடாக தொழிலாளர்களை அவர்களுக்கு தேவை ஏற்படும் நேரத்தில் தொழிற்சாலையிலிருந்து நீக்குவதற்கும் அவர்களுக்கு ஏற்றவாறு தொழில்புரியும் காலத்தை தீர்மானிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

குறிப்பாக, பல்வேறு போராட்டங்களின் பின்னரே தற்போது நடைமுறையில் இருக்கும் 8 மணிநேர பணியை பெற்றுக் கொண்டோம். அவ்வாறு இருக்கையில், தேவை ஏற்படும் பட்சத்தில் 12 மணிநேரம் சேவையாற்றுவதற்கான உரிமையை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனையில் பாரிய குறைபாடுகள் இருக்கின்றன. இந்த யோசனைகளினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...