tamilnid 10 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கருத்து சுதந்திரம் குறித்து எலிசபெத் அதிருப்தி

Share

இலங்கையின் கருத்து சுதந்திரம் குறித்து எலிசபெத் அதிருப்தி

இலங்கையில் ஏற்பட்டுள்ள சில கரிசனைகள் உட்பட கருத்து சுதந்திரத்தின் பல அம்சங்கள் தற்போது உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்க பொது இராஜதந்திரத்திற்கான துணைச் செயலாளர் எலிசபெத் ஆலன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

‘உலகளாவிய ஊடக வெளியும் ஜனநாயகத்தின் மீதான அதன் தாக்கமும்’ என்ற தொனிப்பொருளில் இலங்கை பத்திரிகை நிறுவனத்தினால் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில், ”இலங்கை உட்பட உலகளவில் பல அத்தியாவசிய சுதந்திரங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

அமெரிக்கா கருத்து சுதந்திரத்திற்காக உறுதியாக நிற்கிறது, இணையத்திலும் வெளியிலும் பத்திரிகை சுதந்திரத்திற்காக வாதிடுகிறது.

இலங்கையில் இணைய பாதுகாப்பு சட்டமூலம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. கருத்துச் சுதந்திரம், புத்தாக்கம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றில், குறித்த சட்டத்தின் சாத்தியமான விளைவுகள் குறித்து அமெரிக்க அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் உள்ளடக்கத்தை தணிக்கை செய்வதன் மூலமும் பொதுமக்களிடமிருந்து தகவல்களை தடுக்கும் முயற்சிகளை அரசாங்கங்கள் தீவிரப்படுத்தும் போது, நாம் அது தொடர்பில் பேச வேண்டும்.

கட்டுப்பாடற்ற கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக அதிருப்தி இருந்தாலும், சுதந்திரமான ஊடகம் இலங்கைக்கு எதிரி அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

சுதந்திரமான ஊடகம் மிகப்பெரிய கூட்டாளிகளில் ஒன்றாகும், இது ஒரு நெகிழ்ச்சியான மற்றும் செழிப்பான சமுதாயத்திற்கு வழி வகுக்கிறது. கட்டுப்பாடற்ற கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான வாதங்களைக் கேட்பது பொதுவானது.

அரசாங்கங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதையும் பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஊடகங்கள் பக்கச்சார்பானவை.

தடைகள் இல்லாமல், கருத்துச் சுதந்திரம் தவறான தகவல்களை பரப்புவதற்குத் தூண்டலாம் என்று மற்றவர்கள் கவலைப்படுகிறார்கள்.

எனினும் ஊழல், வன்முறை மற்றும் அரசியல் சண்டைகள் பற்றிய தொடர்ச்சியான அறிக்கைகள் ஒரு நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும், முதலீட்டைத் தடுக்கும் மற்றும் வளர்ச்சியைத் தடுக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...