24 66553c80ebdb5
இலங்கைசெய்திகள்

நாட்டில் மழையுடனான காலநிலை: சடலமாக மீட்கப்பட்டுள்ள யானைகள்

Share

நாட்டில் மழையுடனான காலநிலை: சடலமாக மீட்கப்பட்டுள்ள யானைகள்

இலங்கையில் நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இறந்த நிலையில் மீட்கப்பட்ட 7 இளம் யானைகளுக்கான (Elephants) பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையானது, நேற்றைய தினம் (27.05.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதற்கட்ட விசாரணையில் குறித்த யானைகள் சதுப்பு நிலங்களில் சிக்கி இறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இயற்கை அனர்த்தத்தால் இலங்கையில் அதிக விலங்குகள் பலியாகியுள்ள சம்பவமாக இது அமைந்துள்ளது.

மேலும், பொலன்னறுவை (Polonnaruwa) – திம்புலாகலவில் உள்ள யானைகளின் வாழ்விடங்களில் உள்ள யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, 2019ஆம் ஆண்டில், நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் இதேபோல் ஏழு யானைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...