24 66553c80ebdb5
இலங்கைசெய்திகள்

நாட்டில் மழையுடனான காலநிலை: சடலமாக மீட்கப்பட்டுள்ள யானைகள்

Share

நாட்டில் மழையுடனான காலநிலை: சடலமாக மீட்கப்பட்டுள்ள யானைகள்

இலங்கையில் நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இறந்த நிலையில் மீட்கப்பட்ட 7 இளம் யானைகளுக்கான (Elephants) பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையானது, நேற்றைய தினம் (27.05.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதற்கட்ட விசாரணையில் குறித்த யானைகள் சதுப்பு நிலங்களில் சிக்கி இறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இயற்கை அனர்த்தத்தால் இலங்கையில் அதிக விலங்குகள் பலியாகியுள்ள சம்பவமாக இது அமைந்துள்ளது.

மேலும், பொலன்னறுவை (Polonnaruwa) – திம்புலாகலவில் உள்ள யானைகளின் வாழ்விடங்களில் உள்ள யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, 2019ஆம் ஆண்டில், நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் இதேபோல் ஏழு யானைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
digital ID
செய்திகள்இலங்கை

டிஜிட்டல் பொருளாதாரம்: 2026-ல் ரூ. 25,500 மில்லியன் முதலீடு; மார்ச் 2026-ல் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்!

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக...

MediaFile 7
செய்திகள்இலங்கை

முதலீட்டு வலய சேவை அபிவிருத்திக்கு ரூ. 1000 மில்லியன்: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விசா முறைமை – ஜனாதிபதி அறிவிப்பு!

நாட்டில் முதலீட்டை ஊக்குவிக்கவும், தொழில் துறையை மேம்படுத்தவும் பல புதிய அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் ஜனாதிபதி...

1036524 cigar
செய்திகள்இலங்கை

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் நாடுகள்: 70.5% உடன் இந்தோனேசியா முதலிடம்; இலங்கை 8வது இடத்தில்!

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது...

MediaFile 2
செய்திகள்இந்தியா

நிகழ்நிலை சூதாட்ட செயலி வழக்கு: சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம்!

ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்...