24 66553c80ebdb5
இலங்கைசெய்திகள்

நாட்டில் மழையுடனான காலநிலை: சடலமாக மீட்கப்பட்டுள்ள யானைகள்

Share

நாட்டில் மழையுடனான காலநிலை: சடலமாக மீட்கப்பட்டுள்ள யானைகள்

இலங்கையில் நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இறந்த நிலையில் மீட்கப்பட்ட 7 இளம் யானைகளுக்கான (Elephants) பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையானது, நேற்றைய தினம் (27.05.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதற்கட்ட விசாரணையில் குறித்த யானைகள் சதுப்பு நிலங்களில் சிக்கி இறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இயற்கை அனர்த்தத்தால் இலங்கையில் அதிக விலங்குகள் பலியாகியுள்ள சம்பவமாக இது அமைந்துள்ளது.

மேலும், பொலன்னறுவை (Polonnaruwa) – திம்புலாகலவில் உள்ள யானைகளின் வாழ்விடங்களில் உள்ள யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, 2019ஆம் ஆண்டில், நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் இதேபோல் ஏழு யானைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...