24 665991835a318
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணத்தில் திருத்தம்

Share

மின்சாரக் கட்டணத்தில் திருத்தம்

எதிர்வரும் 2 வாரங்களுக்குள் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனையை முன்வைத்தால், ஜூலை மாத நடுப்பகுதிக்குள் கட்டணத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை மே மாதம் முதலாம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், கடந்த 27ஆம் திகதியிலிருந்து மேலும் 2 வார கால அவகாசம் வழங்குமாறு மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த பிரேரணை கிடைக்கப்பெற்றதன் பின்னர், பொதுமக்களின் ஆலோசனைக்குப் பின்னர் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க, மின்சார கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்படி கருத்தை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...