24 66514f1a9edae
இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலையால் பாதிப்பு – நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

Share

சீரற்ற காலநிலையால் பாதிப்பு – நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக மின்சாரத் தடையை சீர்செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனர்த்த நிலைமைகளின் கீழ், சில பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான விநியோக மின்னழுத்தக் கம்பிகள் மற்றும் மின்மாற்றிகள் மீது மரங்கள் விழுந்துள்ளன.

இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடையை சீரமைக்க தங்களால் முடிந்தவற்றை செய்வோம் எனவும் அதற்கான ஆதரவை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, அறுந்து விழுந்த மின்கம்பிகளை எந்த வகையிலும் தொடவேண்டாம் எனவும் ஊழியர்களின் பணிகளில் தடை ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய நெரிசல் காரணமாக அனைத்து தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்க முடியாது எனவும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் விரும்பிய விரைவான சேவையை வழங்க முயற்சித் வருகிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....