இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு

tamilni 126 scaled
Share

மகிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜேராமவிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று (07.11.2023) மதியம் மின் தடை செய்யப்பட்டதாக மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் பின்னர் முன்னாள் ஜனாதிபதி வசிக்கும் இந்த உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மின்சார சபையினால் மீளவும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமகாலத்தில் மின்சார கட்டணம் அதிகளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களுக்கு பெரும் சுமை என மகிந்த சாடி வருகிறார்.

இந்நிலையில் மின் கட்டணம், நீர்க்கட்டணம் என்பனவற்றை குறைக்க அழுத்தம் கொடுக்கப்படும் என மக்கள் மத்தியில் மகிந்த தெரிவித்து வருகிறார்.

இவ்வாறான நிலையில் மகிந்த வீட்டிலேயே மின் தடையை செய்து மின்சார சபை அவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...