19 4
இலங்கைசெய்திகள்

மின் கட்டணம் அதிகரிக்கிறது! உறுதியாக அறிவித்த ஜனாதிபதி

Share

எதிர்வரும் ஜூலை மாதம் மின்கட்டணம் திருத்தம் செய்யப்படும். குறைந்தபட்ச அளவில் மின்கட்டணம் அதிகரிக்கப்படலாம் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வலுசக்தியின் பாதுகாப்பு தேசிய பாதுகாப்பின் பிரதான அம்சமாகும். வலுசக்தியின் சுயாதீனத்தன்மை இல்லையாயின் தேசிய பாதுகாப்பு பலவீனமடையும்.

இதனால் தான் மின்சார சபையை தனியார்மயப்படுத்துவதற்காக கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.

நடைமுறையில் தனியார் தரப்பினருக்கு மின்சாரத்தை விற்பனை செய்ய முடியும்.இருப்பினும் மின்விநியோக கட்;டமைப்பின் தனியுரிமை இலங்கை மின்சார சபைக்கே உண்டு.

யார் மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும் அதனை மின்சார சபைக்கு விற்பனை செய்ய வேண்டும். ஆகவே மின்கட்டமைப்பின் தனியுரிமை அரசிடமே இருக்க வேண்டும்.

இலங்கை மின்சார சபையை பராமரிப்பதற்கு தொடர்ந்து மக்களின் வரிப்பணத்தை வழங்க முடியாது. மின்னுற்பத்திக்கான செலவுக்கு அமைய மின்சார சபை மின்பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும் என்பது எமது கொள்கை.

மின்னுற்பத்தி செலவுக்கு அமைய மின்கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

மின்சார சபைக்கு திறைசேரியால் தொடர்ந்து நிதி விடுவிக்க முடியாது. ஏப்ரல் மாதம் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கான செலவு மற்றும் வரி உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மே மாதத்துக்கான எரிபொருள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலக்கிடப்பட்ட எதிர்பார்ப்புக்கு அமைவாகவே மின்கட்டணம் தீர்மானிக்கப்படுகிறது. வருடத்தில் இரண்டுமுறை மின்கட்டணம் திருத்தம் செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் மின்கட்டணம் குறைக்கப்பட்டது.

சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் ஜூலை மாதம் மின்கட்டணம் திருத்தம் செய்யப்படும். குறைந்தபட்ச அளவில் மின்கட்டணம் அதிகரிக்கப்படலாம். கடந்த ஜனவரி மாதம் மின்கட்டணம் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டது. அதிகளவான சதவீதத்தில் மின்கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...