14 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களின் வாக்களிப்பு தொடர்பில் தகவல்

Share

வெளிநாட்டவர்களின் வாக்களிப்பு தொடர்பில் தகவல்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டவர்களின் வாக்களிப்பு தொடர்பில் சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் கடவுச்சீட்டுக்களைப் போலியாக அச்சடித்து, அவர்களின் வாக்குகளை மோசடியாக பெற்றுக்கொள்ளும் செயற்றிட்டம் ஒன்று முன்னெடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழும் சுமார் 25 இலட்சம் இலங்கையர்களின் கடவுச்சீட்டை போலியாக அச்சடித்து அவர்களின் வாக்குகளை சூறையாடும் பாரிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த மோசடி வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என இதுவரை இல்லாத சட்டம் திடீரென கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், யாரேனும் ஒருவர் வேறொரு பிரதேசத்தில் வாக்களிக்கும்போது அவரை அடையாளங்காணமுடியாவிடின், அவரது கடவுச்சீட்டை சரிபார்த்து அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும்நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழல் காரணமாக வாக்காளர்களுக்கு வேறொரு இடத்திலிருந்து வாக்களிக்க வாய்ப்பு இருந்ததாகவும், அது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முறையல்ல எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...