tamilnaadi 67 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் தேர்தல் முறையில் மாற்றம்

Share

இலங்கையில் தேர்தல் முறையில் மாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விகிதாசார முறைமையை மாற்றி தொகுதிவாரி அடிப்படையில் தேர்தலை நடாத்துவதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றின் 225 உறுப்பினர்களில் 160 உறுப்பினர்கள் நேரடி தொகுதிவாரி முறையில் தெரிவு செய்யப்படும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளது.

ஏனைய 65 உறுப்பினர்கள் விகிதாசார, மாவட்ட அல்லது தேசிய ரீதியில் தெரிவு செய்யும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சில காலங்களுக்கு முன்னதாக கட்சித் தலைவர்களிடம் தேர்தல் முறை குறித்து கருத்து கோரப்பட்டதாகவும், அமைச்சரவை உப குழுவொன்றும் இந்த முறையை பரிந்துரை செய்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய தேர்தல் முறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் இதனால் இந்த முறையை மாற்றியமைக்க வேண்டுமெனவும் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...