35
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

Share

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், ஒரு வாக்காளருக்கு அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக செலவு செய்ததாகக் கண்டறியப்படுவார்களாயின் அவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்கள், தமது பிரசாரத்தின் போது ஒரு வாக்காளருக்கு செலவழிக்கக்கூடிய அதிகபட்ச தொகையாக ரூபா 109 இனை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது.

அதன்படி, குறித்த தொகையினை வேட்பாளர்கள் மீறும் பட்சத்தில், அவர்கள் தமது பதவியை இழப்பதுடன் மூன்று ஆண்டுகளுக்கு குடியுரிமை உரிமைகளையும் இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க (Saman Sri Rathnayake) தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவு பற்றிய விரிவான அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்க வேண்டும் எனவும் இந்த அறிக்கைகள் பத்திரிக்கைகள் மற்றும் இணையதளங்கள் மூலம் பகிரங்கப்படுத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த அறிக்கைகளில் பிழைகள் அல்லது தவறான தகவல்கள் இருந்தால், பொதுமக்கள் காவல்துறையினரினடம் முறைப்பாடு செய்து, வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...