4 7
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் சலூன் வாசல் திறந்துள்ளது – நாமல் அழைப்பு

Share

மகிந்தவின் சலூன் வாசல் திறந்துள்ளது – நாமல் அழைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மீண்டும் வருபவர்களுக்கு கட்சியின் கதவு திறந்தே உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் சலூன் கதவு வழியாக கட்சிக்கு வரவும் முடியும் அங்கிருந்து செல்லவும் முடியும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷ, எஸ்.எம்.சந்திரசேனவுக்காக நிபந்தனையின்றி குரல் கொடுத்ததாகவும், தான் விரும்பிய பதவிகளை வழங்குவதற்காக அவர் போராடியதன் விளைவாக ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் முரண்பாடு ஏற்பட்டதாகவும் நாமல் தெரிவித்தார்.

அன்று, எஸ்.எம். சந்திரசேனவுக்கான அமைச்சு பதவியை பெற, பசில் ராஜபக்ஷ நிபந்தனையின்றி ஆதரவு தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷவிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஏதாவது மனக்கசப்பு இருந்தால் அதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

சந்திரசேனவிற்கு பதவிகளை வழங்குவதற்காக நாங்கள் போராடியதும் ரணிலுடன் ஏற்பட்ட முரண்பாட்டிற்கு காரணமாக மாறியதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...