6 31
இலங்கைசெய்திகள்

பொதுமக்களிடம் தேர்தல் ஆணையகம் விடுத்துள்ள கோரிக்கை

Share

பொதுமக்களிடம் தேர்தல் ஆணையகம் விடுத்துள்ள கோரிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் யாரேனும் பாதாள மற்றும் குண்டர்களின் ஆதரவைப் பெற முற்பட்டால் அவசர பொலிஸ் பிரிவி்ற்கு உடனடியாக அறிவிக்குமாறு தேர்தல் ஆணையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் 45 பிரிவுகளில் அமைந்துள்ள அவசர பொலிஸ் அறைக்கு உடனடியாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், அந்த பாதுகாப்பில் எவரேனும் திருப்தியடையாத பட்சத்தில், அதற்கான காரணங்கனை கூறும் பட்சத்தில் கூடுதல் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த தேர்தலை மிகவும் அமைதியான முறையில் நடத்த அனைத்து வேட்பாளர்களும் உழைக்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், தேர்தல் நடவடிக்கைகளுக்காக அந்தந்த பொலிஸ் நிலையங்களில் மூன்று சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் இரவு பகலாக பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...