34
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான செலவுக்கணக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள்: ஜனாதிபதியும் உள்ளடக்கம்

Share

ஜனாதிபதி தேர்தலுக்கான செலவுக்கணக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள்: ஜனாதிபதியும் உள்ளடக்கம்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் இதுவரை தங்கள் செலவுக்கணக்கை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலின் ​போது 39 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் ஒரு வேட்பாளருக்கு 109 ரூபா வீதம் செலவழிக்கும் வகையில் பிரசார செலவுக்கான உச்சவரம்பு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் செலவுக் கணக்கை தேர்தல் முடிந்தவுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு நிபந்தனை விதித்திருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட 34 வேட்பாளர்கள் இதுவரை தங்கள் செலவுக்கணக்கை சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அவ்வாறாக தங்கள் செலவுக் கணக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) க்கு முன்னர் தங்கள் செலவுக் கணக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...