24 66fa919fe8b23
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவின் பணிப்புரைக்கு தடை விதித்த தேர்தல் ஆணைக்குழு

Share

ஜனாதிபதி அநுரவின் பணிப்புரைக்கு தடை விதித்த தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அறிவிக்கப்பட்ட மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட உரம் மற்றும் எரிபொருள் மானியத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு 25000 ரூபா உர மானியமும் கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியமும் நாளை முதல் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

எனினும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என தேர்தலகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, தேர்தலின் பின்னர் உரிய கொள்கை தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை குறித்து உர மானியம் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானிய பிரேரணைகளும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுவிக்கப்பட்டது.

எனினும் அப்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல்கள் ஆணைக்குழு அதனை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1737780894 1737780362 yoshitha L
அரசியல்இலங்கைசெய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியின் மனநிலை பரிசோதனை: பணச் சலவை வழக்கு விசாரணை பெப்ரவரி 9 வரை ஒத்திவைப்பு!

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

Ajith Nivard Cabraal
அரசியல்இலங்கைசெய்திகள்

கிரேக்க பிணைமுறி வழக்கு: மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் மூவர் விடுதலை!

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரேக்க பிணைமுறி வழக்குடன் (Greek Bonds Case) தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து...

images 21
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீகஹகிவுல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு: உயிர்ச்சேதம் இல்லை!

மீகஹகிவுல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மொரஹெல – மீகொல்ல பகுதியில் உள்ள ஒரு நிலச்சரிவு அபாயம்...