11 2
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வை நிறுத்தக்கோரி தேர்தல் ஆணையகம் அறிவுறுத்தல்

Share

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வை நிறுத்தக்கோரி தேர்தல் ஆணையகம் அறிவுறுத்தல்

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் (Susil Premajayantha) பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்சா காப்புறுதி’ திட்டத்தை புதுப்பிக்கும் வைபவம் ஒன்றை நடத்துவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணையகம், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நிகழ்வை நடத்துவது ஒரு வேட்பாளரை ஊக்குவிப்பதாக அமையும் என்றும், அதனால் பல்வேறு குழுக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகலாம் என்றும் தேர்தல் ஆணையகத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார்.

சுரக்சா காப்புறுதித் திட்டம் பாடசாலை மாணவர்களுக்கான முக்கியமான திட்டமாகும்.

எனினும் தேர்தலை கருத்திற்கொண்டு, ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ‘சுரக்சா காப்புறுதி’ புதுப்பித்தல் திட்டத்தை ஒத்திவைக்குமாறு ஆணைக்குழு கோரியுள்ளது.

எவ்வாறாயினும், தாம் வேட்பாளர் அல்ல என்றும், எனவே திட்டத்தை புதுப்பிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்வதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சுரக்சா காப்புறுதித் திட்டம் நிதிப் பற்றாக்குறையால் கடந்த இரண்டு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டு தமது தலையீட்டினால் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...