10 30
இலங்கைசெய்திகள்

27ஆம் திகதி நள்ளிரவு வரை காலக்கெடு! தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

Share

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், வேட்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி 2023ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்திற்கமைய தமது தேர்தல் பிரச்சார செலவின் விபரங்களை வேறுவேறாக தயாரித்து 27ஆம் திகதி நள்ளிரவு 12 மணி அல்லது அதற்கு முன்னர் உள்ளூர் அதிகார சபைகளின் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட https://cf.slestions.gov.lk/ இணைய இடையிணைப்பியிலும் பிரவேசித்து பதிவு செய்து கொண்ட பின்னர் அந்த இணையதளத்திற்கு தமது தேர்தல் விபரத்திரட்டுக்களை பதிவேற்றம் செய்யக்கூடிய வகையில் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் இக்காலத்துள் அவற்றை ஒப்படைக்க முடியாதிருப்பின், 27ஆம் திகதிக்கு முன் வேட்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் குழுக்களின் தலைவர்கள் போட்டியிட்ட உள்ளூர் அதிகார சபைகளின் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு கிடைக்கக் கூடியவாறு பதிவுத் தபாலில் அனுப்பிவைப்பதற்கும் வாய்ப்புள்ளது.

2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேரதல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் ஆம் பிரிவிற்கமைய 27ஆம் திகதி நள்ளிரவு 12 மணி அல்லது அதற்கு முன்னர் தேர்தல் விபரத்திரட்டுக்களை ஒப்படைக்காதிருப்பதன் ஊடாக சட்டவிரோதமான செயலொன்றைப் புரிந்தவராகக் கருதி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 11
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...

24 670f93e6eb8ad
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது: வாகன முறைகேடு தொடர்பாக CID நடவடிக்கை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இன்று (30) கைது...

25 6949732ef2e8e
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல்: ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்!

‘டித்வா’ (Titli) புயல் அனர்த்தத்தின் போது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் பொதுமக்களின்...

images 1 9
செய்திகள்அரசியல்இலங்கை

மாணிக்கக்கல் ஏற்றுமதியில் பாரிய வருமான இழப்பு: சட்டவிரோதப் போக்கைக் கட்டுப்படுத்த புதிய வரி நடைமுறை!

இலங்கையில் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையில் நிலவும் நிருவாகச் சிக்கல்கள் காரணமாக, நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய...