18 13
இலங்கைசெய்திகள்

தேர்தலை கண்காணிக்க பொலிஸ் துறையை கையிலெடுத்துள்ள தேர்தல் ஆணையகம்

Share

தேர்தலை கண்காணிக்க பொலிஸ் துறையை கையிலெடுத்துள்ள தேர்தல் ஆணையகம்

தேர்தல் தொடர்பான வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்களை கண்காணிப்பதற்காக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் கீழ், செயற்பாட்டு மையம் ஒன்று அடுத்த வாரத்திற்குள் நிறுவப்படவுள்ளது.

இதுவே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தங்களில் முதன்மையானதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முதலாவது மையம் கொழும்பில் அமைக்கப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக மையங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான விடயங்களை கண்காணிக்க பிரதி பொலிஸ மா அதிபர் கரவிட்ட, ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் ஆணையகத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகளின் மூலம் வேட்புமனுத் தினத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நாட்டில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி பொலிஸ மா அதிபர் ஒருவர் பணியில் இல்லாமை, தேர்தலுக்கு தடையாக இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுவில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்க அரசியலமைப்பின் கீழ் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...