12 3
இலங்கைசெய்திகள்

இடைநிறுத்திய நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு அனுமதி

Share

இடைநிறுத்திய நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு அனுமதி

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் ​போது இடைநிறுத்தப்பட்ட நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் ஓய்வூதியத் தொகை அதிகரிப்பு, முதியோர் நலனோம்புகைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த முயன்ற போதும், தேர்தல் ஆணைக்குழு அதற்கான அனுமதியை வழங்கவில்லை.

இந்நிலையில், குறித்த திட்டங்களை தற்போது நடைமுறைப்படுத்துவதில் தமக்கு ஆட்சேபணை இல்லை என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நடைபெறவுள்ள தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடாத நிலையிலும், அநுரகுமார தற்போது ஜனாதிபதியாக இருப்பதன் காரணமாக குறித்த திட்டங்கள் அவருக்கு தேர்தலில் தனிப்பட்ட செல்வாக்கை அதிகரிக்க உதவாது என்ற ரீதியிலும் இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...