24 65fbe6744de00
இலங்கைசெய்திகள்

30 ரூபாவாக முட்டை விலை

Share

30 ரூபாவாக முட்டை விலை

கடந்த மாதங்களில் வேகமாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் விலையும் மரக்கறிகளின் தட்டுப்பாடும் தற்போது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு தேவையான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, காய்கறிகள், முட்டை, கோழி இறைச்சி மற்றும் பழங்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டினது உற்பத்தியை அதிகரிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் தேவைக்கு அதிகமாக அத்தியாவசியப் பொருட்கள் சந்தையில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக காணப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் புத்தாண்டுக்கு முன்னர் ஒரு கிலோ கரட்டின் விலை 5,000 ரூபாவாக அதிகரிக்கும் என பலர் கூறிய போதிலும் தற்போது கரட் மட்டுமன்றி அனைத்துப் பொருட்களினதும் விலை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி மே மாதத்திற்கு முன்னர் முட்டையினது விலை 30 ரூபாவாக குறைக்கப்படும் எனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...