tamilnaadi 69 scaled
இலங்கைசெய்திகள்

முட்டை விலை தொடர்பில் தீர்மானம்

Share

முட்டை விலையை நிர்ணயிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெருந்தோட்ட கைத்தொழிற்துறை அமைச்சினால் இந்த யோசனை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் முட்டை விலை அதிகரிப்பு குறித்து நேற்றைய தினம் அமைச்சில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது,

இதற்கமைய முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 30 ரூபா செலவாவதாகவும், நாட்டில் நாளொன்றுக்கு 5.8 மில்லியன் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதகாவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாளொன்றில் நாட்டின் முட்டை தேவை 7.5 மில்லியன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முட்டை உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் சில்லறை வியாபாரி ஆகியோரை பாதுகாக்கும் வகையில் முட்டையின் அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது,

முட்டையின் அதிகபட்ச விலை குறித்து விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் மகிந்த அமரவீர, ராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்சன யாபா, அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...