29 1
இலங்கைசெய்திகள்

முட்டை விலை குறைவது பாதக நிலையை உருவாக்கும்! விவசாய அமைச்சு

Share

முட்டை விலை குறைவது பாதக நிலையை உருவாக்கும்! விவசாய அமைச்சு

முட்டை விலை குறைவதானது உற்பத்தியாளர்களுக்கு பாதக நிலையை உருவாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் செயலாளர் எம்.வீ நிசாந்த விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றின் விலை 36 முதல் 37 ரூபாவை விடவும் குறைந்தால் அது முட்டை கைத்தொழிற்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோழித் தீனியின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தற்பொழுது ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கோழித் தீனியின் விலை குறைக்கப்பட்டதன் பின்னர் முட்டை ஒன்றின் விலையை 29 முதல் 30 ரூபா அளவில் குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 32 முதல் 33 ரூபா செலவாகின்றது எனவும் இதில் அதிகளவு தொகை கோழி தீனி வகைகளுக்காக செலவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோழித்தீனியின் விலைகள் சோளத்தின் விலையில் கூடுதலாக தங்கியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...