29 1
இலங்கைசெய்திகள்

முட்டை விலை குறைவது பாதக நிலையை உருவாக்கும்! விவசாய அமைச்சு

Share

முட்டை விலை குறைவது பாதக நிலையை உருவாக்கும்! விவசாய அமைச்சு

முட்டை விலை குறைவதானது உற்பத்தியாளர்களுக்கு பாதக நிலையை உருவாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் செயலாளர் எம்.வீ நிசாந்த விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றின் விலை 36 முதல் 37 ரூபாவை விடவும் குறைந்தால் அது முட்டை கைத்தொழிற்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோழித் தீனியின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தற்பொழுது ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கோழித் தீனியின் விலை குறைக்கப்பட்டதன் பின்னர் முட்டை ஒன்றின் விலையை 29 முதல் 30 ரூபா அளவில் குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 32 முதல் 33 ரூபா செலவாகின்றது எனவும் இதில் அதிகளவு தொகை கோழி தீனி வகைகளுக்காக செலவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோழித்தீனியின் விலைகள் சோளத்தின் விலையில் கூடுதலாக தங்கியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...