tamilni 51 scaled
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு

Share

ஈழத் தமிழர்களின் தேசத்தை, அடிப்படை நிலைப்பாடுகளில் சமரசம் செய்து கொள்ள முடியாது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வீ.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2024 ஏப்ரலில் நடைபெறவிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

2021 செப்டெம்பர் 23ஆம் திகதியன்று திம்புக் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு, முக்கிய புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளால் உருவாக்கப்பட்ட “பொதுக் கோட்பாடுகளே” அரசியல் தீர்மானத்திற்கு அடிப்படையாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சர்வதேச நாடுகளின் அனுசரணையுடன் அரங்கேறிய “இமாலய பிரகடனம்” சிறிது கூட நகரப் போவதில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வரும் ஆண்டுகளில் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தமது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

இந்த நிலையில் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க இந்திய அரசியல் கட்சிகளை வற்புறுத்துவது மற்றும் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில், தமிழர் ஆதரவு நிலைப்பாடுகளை சேர்க்கும் வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை பொறுத்தமட்டில், ஈழத் தமிழ் மக்கள் மூலோபாய ரீதியாக முக்கியமான மக்கள் என்ற கண்ணோட்டத்தில் அதனை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை 2024 ஏப்ரலில் நடைபெறவிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் காசா மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களை தடுக்க ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் தோல்வியடைந்துள்ளன. எனவே சர்வதேச அமைதி மற்றும் நீதிக்கான புதிய நிறுவனங்களை உருவாக்குவதும் புதிய விதிமுறைகளை உருவாக்குவதும் காலத்தின் அழைப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...