tamilni 51 scaled
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு

Share

ஈழத் தமிழர்களின் தேசத்தை, அடிப்படை நிலைப்பாடுகளில் சமரசம் செய்து கொள்ள முடியாது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வீ.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2024 ஏப்ரலில் நடைபெறவிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

2021 செப்டெம்பர் 23ஆம் திகதியன்று திம்புக் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு, முக்கிய புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளால் உருவாக்கப்பட்ட “பொதுக் கோட்பாடுகளே” அரசியல் தீர்மானத்திற்கு அடிப்படையாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சர்வதேச நாடுகளின் அனுசரணையுடன் அரங்கேறிய “இமாலய பிரகடனம்” சிறிது கூட நகரப் போவதில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வரும் ஆண்டுகளில் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தமது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

இந்த நிலையில் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க இந்திய அரசியல் கட்சிகளை வற்புறுத்துவது மற்றும் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில், தமிழர் ஆதரவு நிலைப்பாடுகளை சேர்க்கும் வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை பொறுத்தமட்டில், ஈழத் தமிழ் மக்கள் மூலோபாய ரீதியாக முக்கியமான மக்கள் என்ற கண்ணோட்டத்தில் அதனை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை 2024 ஏப்ரலில் நடைபெறவிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் காசா மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களை தடுக்க ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் தோல்வியடைந்துள்ளன. எனவே சர்வதேச அமைதி மற்றும் நீதிக்கான புதிய நிறுவனங்களை உருவாக்குவதும் புதிய விதிமுறைகளை உருவாக்குவதும் காலத்தின் அழைப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...