இலங்கைசெய்திகள்

ஈழத்தமிழர் சுட்டுக் கொலை: தீவிர விசாரணையில் பிரான்ஸ் காவல்துறை

Share
11 8
Share

ஈழத்தமிழர் சுட்டுக் கொலை: தீவிர விசாரணையில் பிரான்ஸ் காவல்துறை

பாரிஸின் புறநகர் பகுதியான லாகூர்நெவில் கடந்தவாரம் இனந்தெரியாத நபர் ஒருவரால் 29 வயதான தனுசன் என்ற ஈழத்தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கொலைக்குரிய காரணத்தை அறிவதற்கான தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை (06) முதுகில் சுடப்பட்டுகொல்லப்பட்ட 29 வயதான தனுசனின் கொலைக்குரிய காரணங்கள் தெளிவாக தெரியவில்லை என தெரிவித்துள்ள காவல்துறை சிறிய ரக தோட்டாவால் குறித்த நபர் கொல்லப்பட்டமைக்கான நோக்கம் மர்மமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் தனுசன் தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், நண்பர் அங்கிருந்து அகன்றபோது நிலையில் தனுசனின் முதுகுபபக்கமாக சுடப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, சம்பவம் இடம்பெற்றபோது அயலில் வசித்த மக்கள் இரண்டு முறை வெடிச்சத்தங்களை கேட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் வசிக்கும் ஒரு பெண் ஒருவர் மசூதியிலிருந்து திரும்பியபோது தனுசன் சுடப்பட்டு தரையில் வீழ்ந்திருப்பதையும் அவதானித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து, உடனடியாக அந்த இடத்துக்குசென்ற அவசரகால சேவை பிரிவு பணியாளர்கள் தரையில் குற்றுயிராக கிடந்த தனுசனுக்கு விரைந்து முதலுதவிகளை செய்த போதிலும் அந்த முயற்சிகள் பலனளிக்காமல் சிறிது நேரத்தில் அவர் மரணடைந்துள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது.

இந்த நிலையில், கொல்லப்பட்ட தனுசன் வாடகை வண்டி ஓட்டுநனராக பணியாற்றியதாவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணயில், கொல்லபட்ட தனுசனுக்கு எதிரிகள் யாரும் இல்லையென அவரது உறவினர்களும் நண்பர்களும் தெரிவித்துள்ளதால், கொலைக்கான காரணத்தை கண்டறியும் வகையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...