1624450407 online edu 02
அரசியல்இலங்கைசெய்திகள்

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கற்றல் மேம்பாடு: சீருடை கட்டாயம் இல்லை என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Share

‘தித்வா’ சூறாவளியின் பாதிப்புக்குள்ளான மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், அவர்களுக்கு உதவும் நோக்கில் அமைச்சின் டிஜிட்டல் கற்றல் தளம் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காகக் கல்வியமைச்சின் டிஜிட்டல் கற்றல் தளம் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் எந்தவொரு இடத்திலிருந்தும் பாடவிதானங்கள் மற்றும் கடந்தகால வினாப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய இலத்திரனியல் கற்றல் தளமான ஈ-கல்விக்கூடத்திலான (E-thaksalawa) அணுகலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறையினூடாக வெளிவாரியான நெருக்கடிகளின்றி மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்குச் செல்லும் போது சீருடைகள் கட்டாயமாக்கப்படாது எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...