7 9
இலங்கைசெய்திகள்

கிழக்கு மக்களின் ஆதரவு ரணிலுக்கே! பிள்ளையான் திட்டவட்டம்

Share

கிழக்கு மக்களின் ஆதரவு ரணிலுக்கே! பிள்ளையான் திட்டவட்டம்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே (Ranil Wickremesinghe) ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடந்து தெரிவிக்கையில், ”ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில அரசியல் கட்சிகளில் இன்னும் தடுமாற்றங்கள் காணப்படுகின்றன.

அவர்களும் சிறுபான்மைக் கட்சி என்ற அடிப்படையில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு பெருமளவான வெற்றி கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது நேரத்தை வீணடிக்கும் செயற்பாடு மட்டுமல்லாது நாட்டு மக்களைக் குழப்பும் வகையிலான செயற்பாடு” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...