7 9
இலங்கைசெய்திகள்

கிழக்கு மக்களின் ஆதரவு ரணிலுக்கே! பிள்ளையான் திட்டவட்டம்

Share

கிழக்கு மக்களின் ஆதரவு ரணிலுக்கே! பிள்ளையான் திட்டவட்டம்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே (Ranil Wickremesinghe) ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடந்து தெரிவிக்கையில், ”ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில அரசியல் கட்சிகளில் இன்னும் தடுமாற்றங்கள் காணப்படுகின்றன.

அவர்களும் சிறுபான்மைக் கட்சி என்ற அடிப்படையில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு பெருமளவான வெற்றி கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது நேரத்தை வீணடிக்கும் செயற்பாடு மட்டுமல்லாது நாட்டு மக்களைக் குழப்பும் வகையிலான செயற்பாடு” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...