12 18
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு: வெளிச்சத்துக்கு வரும் வெளிவராத உண்மைகள்

Share

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு: வெளிச்சத்துக்கு வரும் வெளிவராத உண்மைகள்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் இதுவரை வெளிவராத பல உண்மைகள் வெளிவருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களை கொன்றது புலிகளின் செயல் என்று காட்ட முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களையும் கொலை செய்தது, புலிகளின் செயல் என்று காட்ட, கொலை நடந்த இடத்திற்கு அருகில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்த ஆடையொன்றை வைத்துவிட்டு, அவரின் கைது தொடர்பில் விசேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு, காவல்துறை உத்தியோகத்தர்களின் படுகொலை மற்றும் துப்பாக்கி கடத்தல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறை உத்தியோகத்தர்கள் மீதும் சில உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது தொடர்பில் மட்டக்களப்பு காவல்துறை பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகளிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்ட நேரம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அந்த காலப்பகுதியில் மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் காவல்துறை மா அதிபர்களாக கடமையாற்றிய பல அதிகாரிகளிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...