12 18
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு: வெளிச்சத்துக்கு வரும் வெளிவராத உண்மைகள்

Share

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு: வெளிச்சத்துக்கு வரும் வெளிவராத உண்மைகள்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் இதுவரை வெளிவராத பல உண்மைகள் வெளிவருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களை கொன்றது புலிகளின் செயல் என்று காட்ட முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களையும் கொலை செய்தது, புலிகளின் செயல் என்று காட்ட, கொலை நடந்த இடத்திற்கு அருகில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்த ஆடையொன்றை வைத்துவிட்டு, அவரின் கைது தொடர்பில் விசேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு, காவல்துறை உத்தியோகத்தர்களின் படுகொலை மற்றும் துப்பாக்கி கடத்தல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறை உத்தியோகத்தர்கள் மீதும் சில உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது தொடர்பில் மட்டக்களப்பு காவல்துறை பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகளிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்ட நேரம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அந்த காலப்பகுதியில் மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் காவல்துறை மா அதிபர்களாக கடமையாற்றிய பல அதிகாரிகளிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...