28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

Share

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி செய்வதாக முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் உயிர்த்த ஞாயிறு தொடர்பான முக்கிய தகவல்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்க்கட்சி முயற்சிகளை மேற்கொண்டது.

எனினும் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்ததன் மூலம் அரசாங்கம் அதற்கான வாய்ப்பை சதி செய்து தடுத்துள்ளது.

நாடாளுமன்ற செயலாளர் அலுவலகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் பரிந்துரைகளை மீறி சபாநாயகர் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்துள்ளார்.

இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்ற பலம் இருக்கும் நிலையில் பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இலகுவாக வெற்றி கொண்டிருக்கலாம்.

ஆனாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்கள் வெளிவருவதைத் தடுக்கும் வகையிலேயே அதனை நிராகரித்து அரசாங்கம் சதி செய்துள்ளது.

எனினும் எதிர்வரும் நாட்களில் எந்த வழியிலாவது குறித்த தகவல்களை நாட்டு மக்களுக்கு முன்வைக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 691b58dca001e
செய்திகள்அரசியல்இலங்கை

பசில் ராஜபக்சவுக்கு நவ. 21இல் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு: அமெரிக்காவில் சிகிச்சையிலுள்ளவர் திரும்புவாரா என்ற சந்தேகம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நிறுவனர் பசில் ராஜபக்ச, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட ரூ. 50 மில்லியன்...

25 691be54fdfdbd
செய்திகள்அரசியல்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: முறையாகப் பதிவுசெய்யப்பட்ட விகாரை அகற்றப்பட்டதைக் கண்டித்து அமரபுர மகா நிக்காய தலைமை தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம்!

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் தலைமை நாயக்க...

Vijayakanth Viyaskanth SRH IPL 2024 1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைவு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில், இளம் சுழற்பந்து...

67e090cde912a.image
உலகம்செய்திகள்

கனடாவின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடி: இஸ்ரேல் ஆதரவுக் குழுவின் தஃப்சிக் அமைப்பு தடை கோரி நீதிமன்றம் நாடியது!

கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...