tamilni 248 scaled
இலங்கைசெய்திகள்

பிரதமர் தலைமையில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்கள்

Share

பிரதமர் தலைமையில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்கள்

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்துக்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முக்கிய இரண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

அந்தவகையில், ஆளும் கட்சி உறுப்பினர்களின் விசேட குழுக் கூட்டம் நேற்று (19.09.2023) நாடாளுமன்றக் குழு அறை இலக்கம் 01 நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவில் இருப்பதால், பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதற்காக அரச தரப்பு அமைச்சர்களின் பிரசன்னம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

விவாதத்தில் பின்பற்ற வேண்டிய விடயங்கள், வெளிப்படுத்தப்பட வேண்டிய கருத்துக்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் மற்றுமொரு விசேட கலந்துரையாடலும் நேற்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

குற்றப் புலனாய்வு திணைக்களம், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலுக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிந்தது.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் எந்தவித அரசியலும் இன்றி முழுமையான உண்மையைக் கண்டறிவதே தமது ஒரே நோக்கம் என இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...