tamilni 248 scaled
இலங்கைசெய்திகள்

பிரதமர் தலைமையில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்கள்

Share

பிரதமர் தலைமையில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்கள்

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்துக்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முக்கிய இரண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

அந்தவகையில், ஆளும் கட்சி உறுப்பினர்களின் விசேட குழுக் கூட்டம் நேற்று (19.09.2023) நாடாளுமன்றக் குழு அறை இலக்கம் 01 நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவில் இருப்பதால், பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதற்காக அரச தரப்பு அமைச்சர்களின் பிரசன்னம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

விவாதத்தில் பின்பற்ற வேண்டிய விடயங்கள், வெளிப்படுத்தப்பட வேண்டிய கருத்துக்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் மற்றுமொரு விசேட கலந்துரையாடலும் நேற்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

குற்றப் புலனாய்வு திணைக்களம், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலுக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிந்தது.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் எந்தவித அரசியலும் இன்றி முழுமையான உண்மையைக் கண்டறிவதே தமது ஒரே நோக்கம் என இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...