இலங்கைசெய்திகள்

சிறப்பு திட்டமாக பெயரிடப்பட்ட கிழக்கு கொள்கலன் முனைய திட்டம்

Share
24 14
Share

சிறப்பு திட்டமாக பெயரிடப்பட்ட கிழக்கு கொள்கலன் முனைய திட்டம்

கிழக்கு கொள்கலன் முனைய திட்டத்தை “சிறப்பு திட்டமாக” பெயரிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபை கடந்த, 02.01.2021 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொழும்பு தெற்கு துறைமுகத் திட்டத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கும், அதனை அதிகாரத்தின் முழு உரிமையின் கீழ் கொள்கலன் முனையமாக செயற்படுத்துவதற்கும் அனுமதி வழங்கியிருந்தது.

இதன்படி, குறித்த சிவில் வேலைகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதுடன், நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த கொள்கலன் முனையத்திற்கான கிரேன்கள் கொள்வனவு செய்வதற்கான கொள்முதலும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு துறைமுகத்தின் தனியார் முனைய செயற்பாட்டாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் மூலோபாய அபிவிருத்திச் சட்டம் மற்றும் முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் பல்வேறு வரிச் சலுகைகளைப் பெறுவார்கள் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...