BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு e-Gates அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன தொழில்நுட்பம் பயணிகளுக்கு விரைவான மற்றும் பாதுகாப்பான குடியேற்ற அனுமதி அனுபவத்தை வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட் பயணம் மற்றும் டிஜிட்டல் எல்லை மேலாண்மை நோக்கிய இலங்கையின் பயணத்தில் இதுவொரு முக்கியமான மைல்கல் என குறிப்பிடப்படுகிறது.

அதற்கமைய, இந்த புதிய வசதியை பயன்படுத்த தகுதியுள்ள பயணிகள் முன் பதிவு செய்து வழங்கப்பட்டுள்ள மூன்று எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் எந்த சிரமமும் இன்றி இல்லாமல் பயணிக்கலாம்.

முதல் படியாக ஒரு முறை பதிவு செய்ய வேண்டும். இரண்டாவது படியாக – தேவையான பயோமெட்ரிக்ஸைப் பெற வேண்டும். மூன்றாவது படியாக பயணத்தை e-Gates மூலம் தொடங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குடியேற்ற கவுண்டர்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்து பயணத்தை மிகவும் இலகுவாக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...