BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு e-Gates அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன தொழில்நுட்பம் பயணிகளுக்கு விரைவான மற்றும் பாதுகாப்பான குடியேற்ற அனுமதி அனுபவத்தை வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட் பயணம் மற்றும் டிஜிட்டல் எல்லை மேலாண்மை நோக்கிய இலங்கையின் பயணத்தில் இதுவொரு முக்கியமான மைல்கல் என குறிப்பிடப்படுகிறது.

அதற்கமைய, இந்த புதிய வசதியை பயன்படுத்த தகுதியுள்ள பயணிகள் முன் பதிவு செய்து வழங்கப்பட்டுள்ள மூன்று எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் எந்த சிரமமும் இன்றி இல்லாமல் பயணிக்கலாம்.

முதல் படியாக ஒரு முறை பதிவு செய்ய வேண்டும். இரண்டாவது படியாக – தேவையான பயோமெட்ரிக்ஸைப் பெற வேண்டும். மூன்றாவது படியாக பயணத்தை e-Gates மூலம் தொடங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குடியேற்ற கவுண்டர்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்து பயணத்தை மிகவும் இலகுவாக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

Share
தொடர்புடையது
25 68f3aa6750683
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது! – தகவல் கசிவு குறித்து கவலை

யாழ்ப்பாணம் – மணியம் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று...

Estate
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: கம்பனிகளின் புறக்கணிப்பால் குழப்பம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சம்பள நிர்ணய சபை கூட்டம் நேற்று (அக்டோபர் 18)...

images 2
செய்திகள்இலங்கை

சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாகப் பரவும் செய்தி – பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன....

MediaFile 1
உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் உடன் அமுலுக்கு!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும்...