21 2
இலங்கைசெய்திகள்

துமிந்த சில்வா மருத்துவமனையில் அனுமதி

Share

மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வா தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை துமிந்த சில்வா சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா (Duminda Silva) சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த தகவலை சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க (Gamini B. Dissanayake) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், துமிந்த சில்வா குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட 18 பேர் கொண்ட விசேட மருத்துவ நிபுணர்களின் சிபாரிசுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் எழுத்து மூலமாக முன்வைத்த கோரிக்கையின் பேரில் சுகாதார அமைச்சு மேற்கண்ட விசேட மருத்துவர் நிபுணர்கள் குழுவை நியமித்திருந்தது.

அதன் பிரகாரம் துமிந்த சில்வாவுக்கு சிறைச்சாலை மருத்துவமனையிலோ, வேறு மருத்துவமனைகளிலோ தொடர்ந்தும் சிகிச்சை வழங்கத் தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் குழு சிபாரிசு செய்துள்ளது.

எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது அவருக்கு சுகவீனக் குறைபாடு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறித்த நிபுணர் குழு சிபாரிசு செய்துள்ளது.

இந்நிலையில், குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் தற்போதைக்கு துமிந்த சில்வா, சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து சாதாரண சிறைக்கூடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...