இலங்கைசெய்திகள்

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் எச்சரிக்கை

Share
5 11 scaled
Share

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் எச்சரிக்கை

வேலை நிறுத்தப்போராட்டங்களில் ஈடுபட்டால் அரசாங்கம் நட்டம் அடையும் எனவும் இதனால் மாதச்சம்பளங்களை குறைக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள் காரணமாக அரசாங்கம் வருமானத்தை இழந்தால் மாதாந்த சம்பள கொடுப்பனவுகளில் சிக்கல் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாதாந்த சம்பளக்கொடுப்பனவுகள் தானாகவே குறையும் எனவும், எந்தவொரு தரப்பேனும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் இந்த போராட்டங்களை முன்னெடுத்தால், அவ்வாறு ஆட்சியை பிடிப்போரினாலும் இரண்டு வாரங்களுக்கு மேல் நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பணப்பற்றாக்குறை ஏற்பட்ட போது அரசாங்கங்கள் பணத்தை அச்சிட்டு பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்பொழுது மத்திய வங்கியினால் இவ்வாறு பணத்தை அச்சிட முடியாது எனவும் அவ்வாறு அச்சிட்டால் உலக நாடுகள் இலங்கையை கைவிட்டு விடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் போன்ற நிறுவனங்களின் ஊடாக நாளாந்தம் திரட்டும் பணத்தைக் கொண்டே சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...