tamilni 363 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சொத்துக்களின் மதிப்பு

Share

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சொத்துக்களின் மதிப்பு

நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்களை கைப்பற்றுவதற்கான விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு ஆரம்பித்துள்ளது.

கஹதுடுவ, மூனமலேவத்தை, தெஹிவளை கடற்பரப்பு மற்றும் பாணந்துறை அலோபோமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமான இந்த சொத்துக்களை அரசாங்கத்திற்கு சுவீகரிப்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு அதில் ஒரு பகுதி ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பூரண மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கையுடன் இணைந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தற்போது புஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடு அசங்க என்ற பிரதான போதைப்பொருள் வியாபாரி சம்பாதித்த 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

கஹதுடுவ மூனமலேவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள குடு அசங்கடவுக்கு சொந்தமான பெரிய இரண்டு மாடி வீடு, 3 மாடி கட்டிடம், 2 காணி, சொகுசு கார், 2 மோட்டார் சைக்கிள்கள், தங்க நகைகள் என்பன அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பாணந்துறை அலோபோமுல்ல பகுதியில் முன்னணி போதைப்பொருள் வியாபாரி பிங்கி உள்ளிட்ட நால்வரை கைது செய்த பொலிஸார், பிங்கி என்ற போதைப்பொருள் வியாபாரிக்கு சொந்தமான சொத்துக்களை அரசுக்கு சுவீகரித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சொத்துக்களில் 4 நவீன வாகனங்கள், மூன்று மாடி வீடு, கட்டிடம் மற்றும் பல சொத்துக்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தற்போது டுபாய் நாட்டில் தலைமறைவாகி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பசிக் என்பவர் முதலீடு செய்த பல கோடி ரூபா பெறுமதியான தெஹிவளை கடற்கரையோரத்தில் அமைந்துள்ள சொகுசு சுற்றுலா ஹோட்டலை கையகப்படுத்துவதற்கு சட்டவிரோத சொத்து குவிப்பு பிரிவினர் நேற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தெஹிவளை கடற்பரப்பில் அமைந்துள்ள இந்த சொகுசு உணவக ஹோட்டலை முன்னாள் அரசியல்வாதி ஒருவரால் நடத்துவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

டுபாயில் மறைந்துள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் முன்னாள் அரசியல்வாதி ஒருவருக்கு பணத்தை முதலீடு செய்து இந்த ஹோட்டலை நிர்மாணித்து மிகவும் வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட மற்றும் கைப்பற்றப்படவுள்ள சொத்துக்களின் பெறுமதி இதுவரை துல்லியமாக கணக்கிடப்படவில்லை எனவும், சொத்தின் தோராயமான பெறுமதி 100 கோடி ரூபாவை தாண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...