24 667944cf387a7
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வியாபாரி

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வியாபாரி

இலங்கையின் கடற்பரப்பில் சுமார் 200 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன் பயணித்தபோது கைப்பற்றப்பட்ட படகின் சொந்தக்காரர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கட்டுநாயக்க(Katunayake) விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் இருந்து தப்பித்துச் செல்ல முயற்சித்தபோதே அவர் இன்று(26.06.2024) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் 200 கிலோகிராம் போதைப்பொருளை ஏற்றிய உள்ளூர் பல நாள் கடற்றொழில் இழுவை படகு கைப்பற்றப்பட்டதுடன் 06 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை நேற்று (25) தெரிவித்திருந்தது.

இலங்கைக்கு மேற்கே சுமார் 121 கடல் மைல் தொலைவில் இலங்கையின் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த படகு இடைமறிப்பு செய்யப்பட்டதாகவும் கடற்படை அறிவித்திருந்தது.

இதனையடுத்து போதைப்பொருட்கள் ஏற்றப்பட்ட படகுடன் கைது செய்யப்பட்ட 6 பேர், இலங்கையின் கரையை நோக்கி அழைத்து வரப்பட்டு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்திருந்தது.

இந்தநிலையிலேயே கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட குறித்த போதைப்பொருள் ஏற்றப்பட்ட படகின் உரிமையாளர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் இன்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
19 3
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய இரட்டை படுகொலை – பின்னணி தொடர்பில் வெளியான பகீர் தகவல்

தென்னிலங்கையில் இளம் தம்பதியை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹுங்கம,...

18 4
இலங்கைசெய்திகள்

பெண் மருத்துவரை துர்நடத்தைக்கு உட்படுத்திய நபர் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துர்நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக...

17 4
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பேரழகு தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவி பெருமிதம்

இலங்கையின் கலாசாரத்தை பார்த்து நெகிழ்ச்சியடைவதாக அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட மகளீர் கிரிக்கெட் அணியின் தலைவி சமாரா...

16 4
இலங்கைசெய்திகள்

20 தமிழ் – சிங்கள தம்பதியினருக்கு வவுனியாவில் திருமணம்

வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிசார்ட் பதியுதீனால் 20...