rtjy 243 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பல பகுதிகளில் காட்டுத்தீ!

Share

இலங்கையின் பல பகுதிகளில் காட்டுத்தீ!

இலங்கையில் வறட்சியான காலநிலை காரணமாக சுமார் ஆறாயிரம் ஹெக்ரயர் காடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், வறட்சி காரணமாக 53774 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 48726 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, காடுகளுக்கு தீ மூட்டுதல் மற்றும் விலங்கு வேட்டையாடுதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காடுகளுக்கு தீ வைப்பதனை தடுக்கும் நோக்கில் மக்களை தெளிவூட்டக்கூடிய வகையிலான நடவடிக்கைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரமொன்று முன்வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...