24 662af0d396706
இலங்கைசெய்திகள்

ஒகஸ்ட் மாதத்திற்கு முன் விநியோகிக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்

Share

ஒகஸ்ட் மாதத்திற்கு முன் விநியோகிக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்

தற்போதைக்கு தேங்கிக் கிடக்கும் விண்ணப்பங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்துக்கு முன்னதாக விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுசனத் தொடர்பு அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெகுவிரைவில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரச நிறுவனங்களில் கூடுதல் வருமானம் ஈட்டும் நிறுவனமாகவும், துறைமுகம், சுங்கத் திணைக்களம் போன்ற முக்கிய பல நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டதுமான நிறுவனமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிடத்தக்க சேவையொன்றை ஆற்றி வருவதாகவும் அமைச்சர் பந்துல தொடர்ந்தும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...