24 662af0d396706
இலங்கைசெய்திகள்

ஒகஸ்ட் மாதத்திற்கு முன் விநியோகிக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்

Share

ஒகஸ்ட் மாதத்திற்கு முன் விநியோகிக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்

தற்போதைக்கு தேங்கிக் கிடக்கும் விண்ணப்பங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்துக்கு முன்னதாக விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுசனத் தொடர்பு அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெகுவிரைவில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரச நிறுவனங்களில் கூடுதல் வருமானம் ஈட்டும் நிறுவனமாகவும், துறைமுகம், சுங்கத் திணைக்களம் போன்ற முக்கிய பல நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டதுமான நிறுவனமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிடத்தக்க சேவையொன்றை ஆற்றி வருவதாகவும் அமைச்சர் பந்துல தொடர்ந்தும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...