இலங்கைசெய்திகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல திருத்தம் தொடர்பான யோசனை!

tamilni 402 scaled
Share

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல திருத்தம் தொடர்பான யோசனை!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை திருத்தங்களுடன் மீள் வரைவு செய்யும் வகையில், சட்ட வரைஞரை அறிவுறுத்தும் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 27.02.2023 அன்று அமைச்சரவை கூட்டத்தின்போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் அரச வரைஞர் தயாரித்த வரைவு யோசனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

எனினும் வரைவு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில உட்பிரிவுகளில் ஆர்வமுள்ள பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்தில் கொண்டு குறித்த வரைவு சட்டமூலத்திற்கு தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், ஏற்கனவே வரைந்த வரைவு யோசனையில் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்களை இணைத்து, பயங்கரவாத எதிர்ப்பு யோசனையை மறுவடிவமைக்க சட்ட வரைஞருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...